நான் ஒரு கதைசொல்லி

ஒருவனுடைய கடந்தகாலம்
அவன் நினைவுகளில்
இருக்கிறது.
வரலாறு எங்கிருக்கிறது?
அது
மக்கள் மனதில்
மட்டுமே தான்
இருக்கிறது.
வரலாறு
சில கதைகளாகவும்
புனைவாகவும் மட்டுமே
நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது.
நம்முடைய நேரடித்
தொடர்பில் இருந்து
தள்ளி நிற்கும்
அடுத்தச் சுற்றுவட்டம்
புனைவு தான் –
இவர் சொல்லி அறிவேன்
அவர் சொல்லி அறிவேன்
என்போம்.
அது சரி.
நமக்கான அடையாளத்தை
யார் சொல்லி ஏற்றோம்?
அதில் புனைவேதும்
நிச்சயம் இல்லையா?
சொல்லுங்கள்.
புனைவேதும் இல்லாதவொன்றை
எனக்கு நீங்கள் சொல்ல முடியுமா?
புனைவே இல்லாமல்
நான் ஒன்றைச் சொல்கிறேன் —
நான் ஒரு கதைசொல்லி.

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

2 thoughts on “நான் ஒரு கதைசொல்லி”

  1. 👏👏✨ ஐயமில்லை தாம் ஒரு கதை சொல்லிதான்🌺

Leave a Reply